August 15, 2016

வடக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவஇ.இந்திரராசா அவர்களினால் வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு கோழிகுஞ்சுகள் வழங்கி வைப்பு!

வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம்ஆண்டு பிரமாண
அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதிஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக கோழிக்குஞ்சு வழங்கிவைக்கும்நிகழ்வு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள அலுவலத்தில் 12.08.2016 அன்று கௌரவ இ.இந்திரராசா வடமாகாண சபை உறுப்பினரால்பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.




No comments:

Post a Comment