August 17, 2016

காணாமல் போனோர் சட்டமூலத்தை கொண்டு வந்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் !

கடந்த வாரம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோரை தேடுவதற்கான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தை தயாரித்தவர்களுக்கும், அதற்கு ஆதரவுஅளித்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என தேசிய இராணுவ ஒன்றியத்தின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் விஜயசேகர தெரிவித்துள்ளார்.


மேலும், காணாமல் போனோரை தேடுவதறகாக ஏற்கனவே பல அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும், அதில் பரணகம ஆணைக்குழுவும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறான ஆணைக்குழுக்கள் இருக்கும் போது காணாமல் போனோரை தேடுவதற்கு தனியான அலுவலகம் அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப்புலி தீவிரவாதிகளை தேடுவதற்கு அலுவலகம் ஒன்றை அமைக்கும் அரசின் ஆர்வத்தை எண்ணி தான் ஆச்சிரியமடைவதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment