August 7, 2016

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு! - அனுமதி கோருகிறார் முதலமைச்சர் !

வட மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்ய குழு ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாணசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அனுமதி கோரி பிரேரணை ஒன்றினை வடக்கு முதல்வர் முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

 
வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை ஏற்கனவே கோரியிருந்த நிலையில் முதலமைச்சரினால் இவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அமர்வின்போது இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment