August 16, 2016

வாழ்வு மட்டுமா அழகு… மரணம் கூடதான் அழகு… கண்ணீர் சிந்திய வைரமுத்து!

பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது 41 ஆவது வயதில் அவர் நேற்று காலமானார்.


மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார்.
தமிழகம் – காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார்.

‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.

தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய தினம் அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட பல திரையுலக பிரமுகர்களில் வைரமுத்துவும் ஒருவர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைரமுத்து இம்மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.


No comments:

Post a Comment