August 16, 2016

நாமலுக்கு முன்னரே, சிறைக்குச் சென்றார் மஹிந்த!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நேற்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அங்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்று காத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment