August 17, 2016

வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்க முடியாது! - தினேஷ் குணவர்த்தன !

வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்க முடியாது. புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முயற்சித்தாலும் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.
ஒருபோதும் நிறைவேறாத ஒரு கனவுக்காக சம்பந்தன் நாடகமாடிக்கொண்டிருக்கின்றார் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

 
இந்தியாவையும் மீறிய சர்வதேச சக்தி ஒன்றின் கைப்பொம்மையாக இன்று கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். அவர் எவ்வாறுதான் முயற்சித்தாலும் ஒருபோதும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment