August 17, 2016

சட்டசபையிலிருந்து ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்!

தமிழக சட்டசபையிலிருந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ததகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன், நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும்படி திமுக எம்எல்ஏ-க்கள் கோரிக்கை விடுத்தனர், ஆனால் சபாநாயகர் இதனை நிராகரித்தார்.

தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் நீண்ட நேரம் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

மேலும் அனைவரும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிடவே, ஸ்டாலினை குண்டுகட்டாக வெளியேற்றினர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக உறுப்பினர்களை எப்படியாவது அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டே அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசுவதாக சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மேலும் சர்வாதிகார போக்குடன் சபாநாயகர் தனபால் நடந்து கொள்வதாக தெரிவித்த ஸ்டாலின், வரும் 22ம் திகதி காவல்துறை மானியக் கோரிக்கையில் திமுக-வினர் பங்கேற்பதை தடுக்கவே சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment