August 17, 2016

மகிந்தவை அடக்குவதற்காக நாமலுக்கு சித்திரவதை! - என்கிறார் காமினி லொக்குகே !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாயை மூட வைப்பதற்காகவே அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நல்லாட்சி அரசாங்கம் அடிக்கடி கைது செய்து, சித்திரவதை செய்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே குற்றம்சாட்டியுள்ளார்.


 
நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்வையிட வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அவர், சிறைக்கு வெளியே, கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

“மஹிந்த ராஜபக்சவை வாய்மூடவைப்பதற்காகவே. நாமல் ராஜபக்ச மீது அரசாங்கம் தொடர் தாக்குதல் நடத்துவதற்கு காரணம். தனது புதல்வரை கஷ்டப்படுத்தினால் எந்த தந்தையாக இருந்தாலும் சரி, அதிர்ந்துவிடுவார்தானே. அப்படியான எதிர்பார்ப்பிலேயே இவ்வாறு செய்யப்படுகின்றது. ஜே.ஆர். ஜயவர்தன, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து இதனையே செய்திருந்தார்.

அவரது உதவியாளர்களே இன்று நாட்டை ஆட்சிசெய்வதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவர்களே ஆலோசனையும் வழங்கிவருகின்றனர். எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு இதனை செய்வது குறித்தே அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஆனாலும் எதனையும் சந்திப்பதற்கு நாம் தயார். அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு ஆதரவாக குரல்கொடுக்க எவரும் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல, மக்கள் குரல்கொடுக்க தயாராகியிருக்கிறார்கள்” - என்றார்.

No comments:

Post a Comment