August 14, 2016

இராணுவத்திடம் காணிகளை இழந்த பரவிப்பாஞ்சான் மக்கள் ஆர்ப்பாட்டம்!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரவிப்பாஞ்சானிலுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

 
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற நிலையை அடுத்து இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, இம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்திருந்தார்.

எனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



No comments:

Post a Comment