July 13, 2016

சிறை எமக்கு சின்ன வீடுதான்; கூறுகிறார் மகிந்தவின் கடைக் குட்டி!

சிறைச்சாலை என்பது எமக்குப் புதிதல்ல, அதுவும் எமக்கு சின்ன வீடுதான் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச.


ரக்பீ விளையாட்டிற்காக தனது மூத்த சகோதரரான நாமல் ராஜபக்ச பலவற்றை செய்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

70 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்காக ரோஹித்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை மகஸின் சிறைக்கு விஜயம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலையிலிருந்து திரும்பிய அவர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment