July 13, 2016

ராஜீவ் கொலையுடன் தொடர்புடைய இலங்கையரை, இலங்கை சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்து கவனம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய இலங்கையரான சாந்தன் என்பவரை இலங்கை சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.



இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சாந்தன் என்ற கைதியை இலங்கை சிறைக்கு அனுப்பி வைக்க தேவையான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.


சுமார் 25 ஆண்டுகள் சாந்தன் இந்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.


இலங்கை சிறைக்கு அனுப்பி வைப்பது குறித்து சாந்தனின் விருப்பம் கேட்டறியப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் குறித்து செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், சாந்தனை இலங்கை சிறைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


எவ்வாறெனினும், சாந்தனின் அனுமதியின்றி இலங்கை சிறைக்கு மாற்றப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment