July 21, 2016

துபாய் 75 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து !

துபாயில் மெரீனா என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். துபாயில் மெரீனா என்ற பகுதியில் சுலாஃபா என்ற அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.


75 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கட்டடத்தின் 35-வது மாடியில் இருந்து ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.

மூன்று மணி நேரமாக தீ பற்றி எரிவதாக கூறப்படுகிறது. உடனடியாக கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. கட்டடம் தீப்பிடிக்கும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.


No comments:

Post a Comment