May 19, 2016

இப்போது நியாயமான தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் சமாதானமான தீர்வு கிடைக்காது: நடராசா!

இந்த அரசாங்கத்தில் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் சுதந்திரமாக தீர்வு கிடைக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.


வாழைச்சேனை பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்த தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி இன்று மாலை விசேட பூசை வழிபாடு இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

இப்போது நியாயமான தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் சமாதானமான தீர்வு கிடைக்க்காது
எமது மக்களின் விடிவுக்காக இந்த அரசாங்கம் நல்ல வேலைகளை செய்தாலும், பெரும்பான்மை இனத்திலுள்ள குரோத எண்ணங்களை கொண்ட அரசியல் வாதிகள் சமாதானத்தை விரும்பும் பெரும்பான்மை இனத்தவர்களின் மனங்களை மாற்றுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.இந்த வருடத்திற்குள் சிறந்த ஒரு தீர்வை எதிர்பார்த்து நிற்கின்றோம். அதற்கு ஆண்டவனும் அருள் புரிய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment