May 30, 2016

புதிய கட்சி தேவையற்றது; சம்பந்தனுடன் நல்லுறவு: சி.வி.விக்னேஸ்வரன் பதில் !

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும்,
தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்புலிருந்து விலகி, புலம்பெயர் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போன்று தோன்றுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச்சேவை ஊகம் வெளியிட்டிருந்தது.

புதிததாக உருவாகும் கட்சி கடும் போக்கு கொள்கையை பின்பற்றும் எனவும் தமிழத்தேசிய கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்க முடியாத நிலை காணப்புடவதால், கூட்டமைப்பு இதற்கு அனுமதியளிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.



No comments:

Post a Comment