September 17, 2015

யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களின் விரிவுரைகள், இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் தங்கியுள்ள இந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டதுக்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தும் கடந்த வாரத்தில் கலைப்பீட 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கிடையில் நடைபெற்று வந்த கைகலப்பின் எதிரொலியாகவே இந்த விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரிவுரைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்படவில்லை. கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment