August 12, 2015

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்படும் போது கூட்டமைப்பு பார்த்துக்கொண்டிருந்தது -கஜேந்திரகுமார்!

சிறிலங்கா இராணுவம் தமிழ் இனத்தின் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலுக்குள் சிக்கிய
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்களை காப்பாற்றுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் போரின் இறுதி நாட்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்தியாவிற்கு சென்று பாதுக்காப்பாக தாம் இருந்து கொண்டு மக்கள் கொல்லப்படுவதனை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக என்னால் மக்களை காப்பாற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போதிலும் அவர்கள் துண்டித்து விட்டனர்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளராக உள்ள மாவை சேனாதிராஜா விடம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது அவரும் நானும் செய்வதறியாது மிகவும் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழுதோம் இது என் தாய் மேல் சத்தியம் என் உணர்ச்சிவசப்பட்டு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment