June 10, 2015

ஆள் கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலிய அதிகாரிகள்!

இந்தோனேசியாவில் இருந்து நியூஸிலாந்து செல்லும் வழியில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்ட அகதிகள் படகு தொடர்பில், அந்நாட்டு குடிவரவுத்துறை அமைச்சர் இன்னும் பதில் வழங்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இலங்கையர்கள் உட்பட்ட 65 பேரை ஏற்றிய படகு அவுஸ்திரேலியா ஊடாக நியூஸிலாந்துக்கு சென்றுக்கொண்டிருக்கையில், அதனை வழிமறித்த அவுஸ்திரேலிய கடற்படையினர் அகதிகளை அழைத்துச் சென்ற கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அகதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதன்காரணமாகவே கடத்தல்காரர்கள் தம்மை கைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் அகதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில் இது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ள போதிலும் குடிவரவுத்துறை அமைச்சர் டட்டன் இன்னும் உரிய பதிலை வழங்கவில்லை.

No comments:

Post a Comment