June 20, 2015

யாழ் இளைஞர் கனடா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!

போலி வீசாவில் நரீடா வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.454 என்ற விமானத்தில் கனடா புறப்பட்டுச் செல்லவிருந்த, இளைஞர் மீது விமான சேவை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, இளைஞரை அவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரிடம் இருந்து போலியான அயர்லாந்து கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகவர் ஒருவரிடம் இரண்டு லட்சம் ரூபாவை செலுத்தி கனடா செல்வதற்கான போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முகவரும் சந்தேக நபருடன் விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment