June 20, 2015

யாழ் கொடிகாமத்தில் பெண்கள் மேற்கொண்ட தாக்குதலில் பல பொலிசார் காயம்!

யாழ் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் நேற்று நள்ளிரவு பெண்கள் படையணி மேற்கொண்ட தாக்குதலில் பல பொலிசார் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின்
சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் அசோகலிங்கத்தின் பெரியம்மாவும் உறவுக்காரப் பெண்களும் சாவகச்சேரி தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை மிகவும் வெற்றிகரமாக அப்பகுதியில் நடாத்தி வந்துள்ளனர்.
இதற்கு கொடிகாமம் பொலிசாரும் ஒத்துழைப்பு வழங்கிவந்ததாகத் தெரியவருகின்றது. தென்மராட்சி உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கு குறித்த பெண்களால் தயாரிக்கப்படும் கசிப்பே விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இந் நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸ் உயரதிகாரிக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் குறித்த கசிப்பு நிலையம் நேற்று நள்ளிரவு பொலிசாரால் முற்றுகையிடப்பட்ட போது அங்கிருந்த பெண்கள் பொலிசாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் மேலதிக பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டு பெண்களைக் கைது செய்யும் நடவடிக்கையைப் பொலிசார் மேற்கொண்ட போது 13 பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் 200 லீ்ற்றருக்கும் மேற்பட்ட கசிப்பு மற்றும் பல உபகரணங்களும் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கசிப்பு சுற்றிவளைப்பு இது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment