May 12, 2015

புதிய அரசாங்கம் பதவி ஏற்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை - மாவைசேனாதிராஜா!

புதிய அரசாங்கத்தின் கீழும் தமிழ் மக்களின் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.


புதிய அரசாங்கம் பதவி ஏற்று 100 நாட்கள் கடந்துவிட்டன.

ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் கூட தமிழ் மக்களை குடியேற்றுவற்கு இராணுவத்தினர் பல்வேறு வழிகளில் தடையாக இருக்கின்றனர்.

குடியேற்றத்துக்கு அப்பால், அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இன்னும்யாரும் விடுவிக்கப்படவில்லை.

எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment