May 10, 2015

முல்லிக்குளத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-அடைக்கலநாதன் !

மன்னார் முல்லிக்குளத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளையும் விடுவிக்க வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
 திருகோணமலையில் சம்பூர் மற்றும் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசங்கள் சிலவும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் விடுவிக்கப்படாதுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முல்லிக்குளம் பிரதேசம் நீண்டகாலமாக கடற்படையினரால் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment