May 4, 2015

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்! முதலமைச்சர் புறக்கணிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டம் இன்று
வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடியுள்ள மத்திய செயற் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு கட்சிகளுக்கிடையிலான
ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் ஹெரியுடனான சந்திப்பின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இச் செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.சுமந்திரன், துரைராஜசிங்கம், உட்பட மத்தியகுழுவில் அங்கம் வகிக்கும் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment