May 11, 2015

யாழ் மானிப்பாயில் சைக்கிளில் சென்ற இரு பெண்களிடம் கொள்ளை!

பட்டப்பகலில் ஒரு சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு இளம் பெண்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் சைக்கிளில் கூடையில் வைக்கப்பட்டிருந்த பணம் கைத்தொலைபேசி உட்படத் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்துள்ளார்.

இத்துணிகரமான சம்பவம் வழிப்பறிக்குப் பெயர் போன இடமாகக் கருதப்படும் மானிப்பாய் மத்திய சந்தைக்கு முன்பாக உள்ள மூத்த தம்பி வீதியில் இடம்பெற்றுள்ளது. 
மானிப்பாயிலிருந்து சுது­மலை நோக்கி பகல் 3.00 மணியளவில் ஒரு சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் மேற்படி வீதியில் வைத்து மக்கள் நடமாட்டமில்லாத சமயம் பார்த்து சைக்கிள் கூடையில் வைக்கப்பட்டிருந்த பணம் கைத்தொலைபேசி தங்க நகைகள் அடங்கிய கைப்பையை எடுத்துக் கொண்டு மறைந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment