May 6, 2015

யாழில் போதைப் பொருள் விற்பவர்கள் யார் என்பது தெரிந்தும் முறையிட பயப்படுகிறார்கள் : ஜெயசேகரம் !

கிராமிய மட்டத்திலும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. இதனை யார் விற்கின்றார்கள், எங்குள்ளது என்பது பற்றி கிராமிய மட்ட அமைப்புக்களுக்கு தெரிகின்றது.ஆனால் அவர்கள் முறைப்பாடு செய்வதற்கு பயப்படுகின்றார்கள் என்று, யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.


அவ்வாறு முறைப்பாடு செய்து குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் வெளிவந்து, தன்னை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்கின்றார். இதனால் முறைப்பாடு செய்தவருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

இதனால் தகவல்கள் தருபவரின் பாதுகாப்பு பேணப்பட்டு, அவரது இரகசியமும் பேண பொலிஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு வடமாகாணப் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க பதிலளிக்கையில்,   போதைப்பொருள் தொடர்பில் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறான தகவல்களை தருபவர்கள் பயப்படக்கூடாது. கீழ்மட்ட அதிகாரிகளை விடுத்து எனக்கு நேரடியாக தெரியப்படுத்த முடியும். அதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கும், முறைப்பாட்டாளர்களின் பாதுகாப்பும் பேணப்படும்.

071 8591005 என்ற எனது தொலைபேசி இலக்கத்துடனும், anjala1961@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment