May 9, 2015

கட்டாரில் தீயில் எரிந்து சாம்பலான குடியிருப்பு தொகுதி! 350 இலங்கைப் பணியாளர்கள் பாதிப்பு ( வீடியோ, படங்கள் இணைப்பு)

கட்டாரில் இடம்பெற்ற தீ விபத்தினால் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு தொகுதி தீக்கரையாகியுள்ளது.
அக்குடியிருப்புக்களில் கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்களே தங்கியிருந்துள்ளார்கள்.

இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு, உறைவிடமற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் முகங்கொடுத்துள்ள இந்நிலைமை குறித்து எந்த அதிகாரிகளும் கவனம் செலுத்தி, நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் பாதிக்கப்ட்டவர்கள் இலங்கை ஊடகமொன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
குறித்த தீவிபத்து ஆராயுமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
qutar_fire_accident-001
qutar_fire_accident-002
qutar_fire_accident-003

No comments:

Post a Comment