August 18, 2014

மானிப்பாய் மாணவியிடம் வீடியோவில் காமம்! அகப்பட்ட ஆசிரியர்!

தனது கைத் தொலைபேசியில் செக்ஸ் வீடியோக்களைப் பதிவு செய்து கொண்டு வந்து அதை மாணவிகள் சிலருக்குக் காட்டி அந்த வீடியோவால் மனம் குழம்பிய
ஒரு மாணவியை தனது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி காமப் பிசாசாக மாறிய ஆசிரியா் ஒருவா் மானிப்பாய்ப் பகுதியில் அப்பகுதி மக்களால் பிடித்து நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மானிப்பாய் செல்லமுத்து மைதானப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனியார் வகுப்புக்கள் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இந்த வகுப்பிற்கு வந்த மாணவியொருவரை வீட்டில் வைத்து மேற்படி ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அறிந்த அப்பகுதி மக்கள், மேற்படி ஆசிரியரை பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியரிடம் கல்வி கற்கவரும் மாணவிகளுக்கு இவா் ஆபாசப்படங்கள் காட்டி வந்ததாகவும் அதில் மனம் குழம்பிய மாணவிகளை இவா் தனது பாலியல்தேவைக்குப் பயன்படுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment