August 18, 2014

மாவை கைது செய்யப்படுவாரா?!

இலங்­கையில் இருந்து கொண்டு இரா­ணு­வத்­திற்கு எதி­ராக எவ­ரேனும் சர்­வ­தே­சத்­திடம் சாட்­சி­ய­ம­ளிப்­பார்­க­ளாயின் அவர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய
வேண்டும் என தெரி­விக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழு­விடம் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தாக கூறும் மங்­கள சமர­வீர மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரை அர­சாங்கம் உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்­பிட்­டது.
இலங்கை விவ­கா­ரங்கள் தொடர்பில் ஐ.நா. குழு­வி­ன­ரிடம் சாட்­சி­ய­ம­ளிப்போம் என தமிழ் தேசி­யக்­கட்­சியின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர ஆகியோர் தெரி­வித்­துள்ள நிலையில் இவ்­வி­டயம் தொடர்பில் வின­விய போதே தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இலங்­கையில் இடம்­பெற்ற யுத்தம் தற்­போது முடி­விற்கு கொண்டு வரப்­பட்டு ஐந்து ஆண்­டு­க­ளையும் கடந்து விட்­டது. தற்­போது வடக்கில் அமைதி நில­வு­கின்­றது. தமிழ், சிங்­கள மக்­க­ளி­டையே முரண்­பா­டுகள் இல்­லாத நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி ஆகிய பிரி­வினை வாதக்­கட்­சிகள் நாட்டில் மீண்டும் ஒரு யுத்­தத்­தினை உரு­வாக்கும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.
இலங்­கையில் இடம்­பெ­றாத யுத்த குற்­றங்கள் தொடர்பில் பொய்­யான சாட்­சி­யங்­களை உரு­வாக்கி சர்­வ­தே­சத்­திடம் வழங்கு­வது தேசத்­து­ரோக செயற்­பா­டு­களே. அதை சாதா­ரண பொது­மக்கள் செய்­தா­லுமோ அல்­லது அர­சியல் தலை­வர்கள் செய்­தா­லுமோ அது தேசத்­து­ரோக செயற்­பா­டா­கவே அமையும். இன்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் தம் பக்க சாட்­சி­யங்கள் பல­வற்றை சர்­வ­தே­சத்­திடம் வழங்கி வரு­கின்­றனர்.
அதே பாதை­யினை தற்­பொ­ழுது ஐக்­கிய தேசிய கட்­சியும் பின்­பற்ற ஆரம்பித்­துள்­ளது. தமது தேவை­க­ளுக்­காகவும் சர்வதேசத்தின் பணத்திற்காகவும் நாட்டைசீரழிக்க முயற்சிக்கும் மாவை சேனாதிராஜா, மங்கள சமரவீர ஆகியோரை அரசாங்கம் உடனடியாக கைது செய்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment