August 18, 2014

காணாமல் போனோர் தொடர்பில் இதுவரை 20,000 முறைப்பாடுகள் பதிவு!

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு இதுவரை சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரிவிக்கபடுகிறது.மேலும் அவர்கள் தெரிவிக்கையில் :

குறித்த குழுவினால் இதுவரை ஆறு கட்டங்களாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இறுதியாக கடந்த 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மன்னாரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது 187 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்வருடம் ஜனவரி மாதம் கிளிநொச்சியிலும் பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்திலும் மார்ச் மாதம் மட்டக்களப்பிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் ஜூன் மாதம் முல்லைத்தீவிலும் ஜூலை மாதம் மீண்டும் மட்டக்களப்பிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

No comments:

Post a Comment