August 18, 2014

திருமலையில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு இராணுவ உணவகம் நிர்மாணிக்கப்படுகின்றது!

திருகோணமலையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டு, இராணுவ உணவகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 


திருகோணமலை கறுமலைஊற்று பகுதியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றே இவ்வாறு இராணுவத்தினரால் நேற்று இடிக்கப்பட்டுள்ளது. 
இந்த பள்ளிவாசல் 1926ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகும். 

அண்மையில் சீனாவுக்கு வழங்கப்பட்ட 1200 ஏக்கர் காணியில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள காணியும் அடங்குகின்றது. 

இந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமுமாக இரண்டு தினங்களாக இராணுவத்தினர் சத்தமின்றி பள்ளிவாசலை தகர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment