August 23, 2014

உலகில் கெட்ட மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 26வது இடம்!

mahinda_rank_001வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான கெட்ட மனிதர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 26 வது இடத்தில் உள்ளார்.

பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய உலகளாவிய ரீதியில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் தி. ருன்கர் என்ற அமைப்பு உலகில் மிக மோசமான கெட்ட மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தரப்படுத்தியுள்ளது.
உலக மக்களின் வாக்கெடுப்பில் மூலம் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது என்பது இங்கு முக்கியமானது.
வரலாற்று காலம் முதல் இன்று வரை உலகில் உள்ள கெட்ட மனிதர்கள் என்ற இந்த தரப்படுத்தலில், இனப்படுகொலையாளர்கள், சர்வாதிகாரிகள், திரிபுப்படுத்த தர்ம உபதேசங்களை செய்தவர்கள், விசர்தனமாக அரசியல் வாதிகள் ஆகியோர் உள்ளடக்கப்படுகின்றனர்.
தமது சமதர்ம கொள்கைக்கு எதிராக செயற்பட்டார் என்ற காரணத்தினால் தனது சகாவான ட்ரொக்ஸ்கி என்பவரை பனி பாறைகளை உடைக்கும் கோடாரியில் வெட்டிக் கொலை செய்த மற்றும் தனது கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிராந்தியம் ஒன்றுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்காது லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமான சோவியத் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் இந்த தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளார்.
ஜோசப் ஸ்டாலியின் செம்படையினரால் தோற்கடிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை கொலை செய்த ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடோல் ஹிட்லர் இரண்டம் இடத்தில் உள்ளார்.
இவர்களை தவிர போல்போட், இடி அமீன், மாவோ சேதுங், ஒசாமா பின் லேடன், கிம் ஜோன் ஹில், ஹென்ரிச் ஹிம்லர், சாதம் உசைன், போனிட்டோ முசோலினி, ஆகியோர் வரிசைப்படுத்தல் படி முதல் பத்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
பத்திரிகை ஆசிரியர்களை நடு வீதியில் பகிரங்கமாக கொலை செய்து, ஊடகவியலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை வெள்ளை வான் மூலம் கடத்தி காணாமல் போக செய்து, ஊடக நிறுவனங்களை தீயிட்டு கொளுத்தி, வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறி அழைத்து பின்னர் அவர்களை கொலை செய்து,
தனது ஆலோசகரை தமது நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு நடு வீதியில் வைத்து சுட்டுக்கொலை செய்து, பெட்ரோல் மானியம் கேட்ட மீனவர்கள், ஓய்வூதியத்தை எடுக்க வேண்டாம் எனக் கூறிய தொழிலாளர்கள், குடிநீர் கேட்ட பாடசாலை மாணவர்களை சுட்டுக்கொலை செய்து,
தமது பிரஜைகளின் தங்கத்தை கொள்ளையிட்டு, புதையல்களை தோண்டி, அருங்காட்சியத்தை உடைத்து பண்டைய கால வாளை திருடி, லட்சக்கணக்கான மக்களை கொலை செய்ய தேவையான வெடிப் பொருட்களை கொண்டு வந்த பயங்கரவாத தலைவர்களை அரவணைத்து, 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை அடக்கி ஆளும் மகிந்த ராஜபக்ஷ, இந்த பட்டியலில் 26 இடத்தில் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் அவர் முதலாவது இடத்தில் இருக்க வேண்டும் என்பதே நல்லொழுக்கம் மிக்க மக்கள் கருத்தாக இருப்பதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
தரப்படுத்தலில் உள்ள ஏனைய கெட்ட மனிதர்கள் ஒரு கெட்ட வேலையை செய்திருந்தாலும் மகிந்த ராஜபக்ஷ, உலகில் உள்ள அனைத்து கெட்ட கெடுதிகளையும் செய்தும் செய்து கொண்டும் இருக்கும் நபர் எனவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment