August 30, 2016

பிள்ளையானின் சகா பிரசாந்தனுக்கு பிணை வழங்க மட்டு.மேல்நீதிமன்றம் அனுமதி!

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனுக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 
சந்தேக நபர்களான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனுக்கும் பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இவர்கள் இருவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார். அத்துடன், ஒவ்வொரு வாரத்திலும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு முன்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இவர்கள் இருவரும் கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment