August 15, 2016

கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு! யாழில் சம்பவம்!

ஊர்காவற்துறை - காரைநகர் பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சிறுமி நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காரைநகர், திக்கரையை சேர்ந்த சண்முகராஜ துவாரகா என்ற 15 வயதான சிறுமியொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதிக்கு தேங்காய் பறிப்பதற்கு வருககை தந்த சிலர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார், இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டாரா?

அல்லது தற்கொலை சம்பவமா? என்பது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment