July 6, 2016

முள்ளியவளையில் உள்ள வைத்தியரின் வீட்டில் இரண்டு ஆண்டுக்கு முன்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் அயன்சேவ்வினை காணவில்லை!

முள்ளியவளையில் உள்ள வைத்தியரின் வீட்டில் இரண்டு ஆண்டுக்கு முன்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் அயன்சேவ்வினை கடந்த வியாளக்கிழமை இரவு முழுவதும் தேடியபோதும் கிடைக்கவிலை.


முள்ளியவளைப் பிரதேசத்தில் யுத்தகாலத்தில் புதைத்திருக்கலாம் என கருதப்படும் சுமார் 5 அடி உயர அயன்சேவ் இருப்பதாக ஒருவர் வழங்கிய இரகசிய தகவலின் பிரகாரம் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணிவரையும் தேடுதல் இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற தேடுதலிற்காக குறித்த வளவின் பெரும்பகுதி தோண்டப்பட்டபோதிலும் எப்பொருளும் மீட்கப்படவில்லை. இருப்பினும் தகவல் வழங்கியவர் உறுதிபடத் தெரிவிப்பதனால் குறித்த பிரதேசம் மீண்டும் செவ்வாய்க் கிழமை அதே பிரதேசத்தில் தேடுதல் இடம்பெறவுள்ளது.

குறித்த வளவின் உரிமையாளர்கள் கணவன் மனைவி இருவரும் யாழில் தொழில் புரிபவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

No comments:

Post a Comment