July 13, 2016

வவுனியாவில் ரயில்வே கடவை காப்பாளர்கள் உண்ணாவிரதம்!

பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் வவுனியா ரயில் நிலைய வளாகத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது ஊதியத்தை அதிகரிக்குமாறு கூறியும், நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் நாடு பூராகவுமுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வவுனியாவில் அந்த சேவையில் உள்ளவர்களும் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 
நாளொன்றுக்கு வழங்கப்படும் 250 ரூபா சம்பளம் போதுமானதல்ல என்று கூறி ரயில் கடவை காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பெரும்பாலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பொலிஸாரும் ரயில்வே திணைக்கள ஊழியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




No comments:

Post a Comment