July 21, 2016

இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி!

இளம் காதல் ஜோடி, கண்டி தலதா மாளிகைக்கு அருகில் உள்ள ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த காதல் ஜோடி, மத்துரட்ட மற்றும் புபுரஸ்சை பகுதியை சேர்ந்த, 19 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment