July 2, 2016

புதுக்குடியிருப்பு, பரந்தன் வீதியில் 3 வயது பாலகனின் உயிரை பறித்த பாரவூர்தி!

புதுக்குடியிருப்பு, பரந்தன் வீதியில் பாலர் பாடசாலையின் மாணவரொருவர் பாரவூர்தியுடன் மோதி உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து நேற்று மாலை சுகந்திரம் பிரதேசத்தில் வெள்ளபள்ளம் சந்திக்கு அருகில் பாதை ஊடாக சென்ற மாணவன் மீது மோதியதினால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினால் படுகாயமடைந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் 3 வயதுடையவர் என பரந்தன் பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment