June 30, 2016

யானை சவாரியினை உறுதி செய்த சரத்பொன்சேகா!

எதிர்கால அரசியலை பயணத்தினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே இதனை கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளும் தான், மக்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுதர எதிரப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியினை இணைந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment