May 19, 2016

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத்தலைவர்களாக மூவர் நியமனம்!

ஜன­நா­யக தமிழ் தேசிய முன்­ன­ணியின் இணைத்­த­லை­வர்­க­ளாக தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் வீ. ஆனந்­த­சங்­கரி, ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவா­னந்தா, ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரஸின் ஸ்தாப­கத் ­த­லைவர் பிரபா கணேசன்
ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.முன்­ன­ணியின் குழுக்­கூட்டம் நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. இதன்­போதே இணைத்­த­லை­வர்­க­ளாக மூவ­ரையும் நிய­மிப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சிறிது காலம் குழு­வாக இயங்­கிய பின்னர் தலை­மைத்­துவம் குறித்து முடிவு எடுப்­பது என்றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.நேற்­றைய கூட்­டத்தில் கருத்துத் தெரி­வித்த இணைத்­த­லை­வ­ரான வீ. ஆனந்த சங்­கரி, எமது முன்­ன­ணியில் யார் வேண்­டு­மா­னாலும் இணைந்­து­கொள்­ளலாம். தமிழ் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை வெளிப்­ப­டை­யாக அணு­கு­ப­வர்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை நாம் இணைத்­துக்­கொள்ளத் தயா­ராக இருக்­கின்றோம் என்று கூறி­யுள்ளார்.தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு , மீள்­கு­டி­யேற்றம், மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னைகள் உட்­பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் குரல்கொடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment