September 17, 2015

பொய்யான வன்புணர்வு வழக்கு; பொலிஸாரை பிழையாக நடத்திய யுவதி!

தம்மை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்று கூறி, கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்வதாக மனுதாரரான யுவதி ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் நீதிமன்றம் உடனடியாக இந்த மனுவை விலக்கிக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
அதேநேரம் பொலிஸாரும் குறித்த யுவதி தம்மை பிழையான வழிநடத்தினார் என்றுக்குற்றம் சுமத்தி அவர் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொழும்பின் பிரபல வர்த்தகரான பிரஷான் நாணயக்கார மீது குறித்த யுவதி வழக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், வர்த்தகரும் கைது செய்யப்பட்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையிலே யுவதி வழக்கை திரும்பப் பெறும் விண்ணப்பத்தை அளித்துள்ளார்.
இந்தநிலையில் யுவதியின் வழக்கு விசாரணை, ஒக்டோபர் 7ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment