September 18, 2015

ரொறொன்ரோவின் துப்பாக்கி வன்முறை அதிகரிப்பு குறித்த ஆச்சரியத்தில் நிர்மலேந்திரன் சகோதரர்களின் தொடர் கொலை.!

கனடா- 2012ல் இருந்து ரொறொன்ரோவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இவ்வேளையில் பயம் வன்முறை மற்றும் பாசம் நிறைந்த மூன்று  நிர்மலேந்திரன் சகோதரர்களின் தொடர் கொலை, CBC-யின் Metro Morning நிகழ்ச்சியில்   நினைவு கூரப்பட்டது. நிர்மலேந்திரன் சகோதரர்கள் இளம் வயதினராக கனடா வந்தனர். 1990ன் நடுப்பகுதியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் அலையின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்த றீஜன்ட் பார்க்கில் வளரந்தவர்கள். மூவரில் மூத்தவரான நிக்சன் 23வயது 2012ல் ஈற்றன் சென்ரரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அவரது முன்னாள் நண்பர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து குறைந்தது ஒரு வருட காலத்திற்குள் இவரது நடு சகோதரர் றீஜன்ட் பார்க் படிக்கட்டுகளில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார். ஆகஸ்ட் மாதம் 2015ல் மூன்றாவது சகோதரரான நிருசன் நிர்மலேந்திரன் தெளிப்பு தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியால் ஓடிக்கொண்டிருந்த வாகனத்தில் இருந்து சுட்டார் என கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தொடர்ச்சியான துப்பாக்கி வன்முறைக்கு எவ்வாறு மூன்று சகோதரர்களும் அவர்களது மிக இளவயதிலேயே ஈடுபட்டனர் என்பது ஆய்விற்குரிய ஒரு விடயமாகும். 

No comments:

Post a Comment