September 17, 2015

கடற் பகுதி கொந்தளிப்பு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற் பகுதி கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு கரையோரமாக காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் அளவில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் புத்தளம் மாத்தறை ஊடாக கொழும்பு காலி வரையான கடலோரங்களிலும் மற்றும் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடும் என  வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment