September 17, 2015

தங்கம் கடத்திய நபர் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது!

இந்தியா – சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 90 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 26 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment