September 1, 2015

யாழில் இந்திய மீனவர்கள் 16 பேர் கைது!(படங்கள் இணைப்பு)

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் யாழ். பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்தியாவின் நாகைப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கடற்தொழிலுக்கு பயன்படுத்திய மூன்று டோலர் படகுகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ் வடமராட்சி கட்டைக்காடு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை நேற்று நள்ளிரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு யாழ் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment