August 29, 2015

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்?-திவயின பத்திரிகை!

வன்னி இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கையில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக திவயின பத்திரிகை விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செப்டம்பர் இறுதியில் இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணைக்குழுவின் அறிக்கை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக வன்னி நடவடிக்கையில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்று கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தை சுவிஸில் இயங்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாகவும் திவயின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment