May 5, 2015

முன்னாள் பெண் போராளியின் தொழில் முன்னேற்றத்துக்கு ஜேர்மனிய உதவும் இதயங்கள் அமைப்பு உதவி!

யாழ்.வடமராட்சியைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவரின் தொழில் முன்னேற்றத்திற்கு ஜேர்மனிய உதவும் இதயங்கள் அமைப்பு உதவி செய்ய முன் வந்துள்ளது.
யுத்தத்தினால் கைகள் இரண்டையும் இழந்தும் நம்பிக்கை இழந்துவிடாத அந்த
முன்னாள் பெண்போராளி கணனி கற்பித்தலை தாயகத்து சிறார்களிற்கு வழங்க ஆர்வம் கொண்டுள்ளார்.
அதற்கான கற்றல் மண்டபத்தை அமைத்து வழங்க ஜேர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பு முன்வந்து ஒரு தொகை நிதியை வழங்கியிருக்கின்றது.
ஜேர்மனியில் வசிக்கும் கயல்பிரோன், பாட்பிறிக்சால், இந்திரகுமார் கடந்த 10 வருடங்களிற்கு மேலாக சமய சடங்குகளிற்கு பொருட்களை வாடகைக்கு விடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயினை தாயக மக்களிற்கு வழங்கி வருகின்றார்கள்.
அவர்களே கணணி கற்றல் அறை அமைப்பதற்கு இரண்டாம் கட்ட உதவியாக ஜம்பதினாயிரம் ரூபாவை வழங்கி முன்னாள் போராளியின் வாழ்வினில் விளக்கேற்றி வைத்துள்ளனர்.
குறித்த உதவியினை அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும், வலி.வடக்கின் மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவருமான ச.சஜீவன் பெற்று வழங்கியிருந்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளைக் கைதூக்கிவிடுவது காலத்தின் தேவை .அவ்வகையினில் புலம்பெயர் உறவுகள் தங்கள் கைகளினை எப்போதுமே தாயக உறவுகளிற்காக நீட்டிய வண்ணமேயிருக்கின்றன என சஜீவன் தெரிவித்தார்.
யாழ்.நகர் நிருபர்-
dd1

No comments:

Post a Comment