May 5, 2015

புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஈவினைப் பகுதியில் மினி சூறாவளி; மூன்று வீடுகள் சேதம் !


யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஈவினைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை வீசிய மினி சூறாவளியால் மூன்று வீடுகள் சேதமடைந்தன.
நேற்று மதியம் சுன்னாகம், மல்லாகம், புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது வீசிய
மினிசூறாவளியால் ஈவினைப்பகுதியில் முத்துக்குமார் மகேஸ்வரன், பரமசிவம் செல்லையா ஆகியோரின வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
இதேசமயம் செல்லையா ரஞ்சித்குமார் என்பவரின் வீட்டின் மீது மரம் முறிந்து வீழ்ந்து சேதமடைந்தது. எனினும் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதேவேளை இன்று பெய்த கடும் மழையாலும் காற்றாலும் மின்கம்பி அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சுன்னாகத்தில் பலியானமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பல வாழைத்தோட்டங்களும் கடுமையாக நாசமாகின.



No comments:

Post a Comment