வவுனியாவில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதி தொடர்ச்சியாக தொலைபேசியில் உரையாடியவாறு நீண்டதூரம் பஸ்ஸைச்
செலுத்தினார் என்று அதில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.
“தாம் அவரை தொலைபேசியில் உரையாடியவாறு வாகனத்தைச் செலுத்தவேண்டாம் என்று கேட்டபோதும் குறித்த சாரதி எமது கோரிக்கையை செவிமடுக்கவில்லை” என்றும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
“நாம் இவ்வாறு தான் செல்வோம், கஷ்டம் என்றால் வேறு பஸ்ஸில் செல்லுங்கள்” என்று கூறிய சாரதி சிலரை பஸ்ஸிலிருந்து இறக்கியும் விட்டார் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
No comments:
Post a Comment