August 18, 2014

மாணவர்களை தாக்கிய சமூக விரோதிகள் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் - அய்யா பழ.நெடுமாறன் எச்சரிக்கை!

மாணவர்கள் புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் தமிழக மாணவாகள் தாக்கப்பட்டதை
இயக்குனர் கௌதமன் வாயிலாக அறிந்துகொண்டார் அய்யா நெடுமாறன் அவர்கள். காயமடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்ட மாணவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்குமாறு இயக்குனர் கௌதமனிடம் பணிப்பை விடுத்திருந்தார் அய்யா நெடுமாறன்.

இயக்குனர் கௌதமனும் மாணவர்கள் கூடவே இருந்து, காவல் துறையிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி விடுவித்துக்கொண்டு, மாணவர்களை தாக்கியவர் மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார் கௌதமன்.

மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு அய்யா.பழ நெடுமாறன் விடுத்துள்ள அறிவிக்கை (அறிக்கை) யின் சுருக்கம் கீழ் வருமாறு:

சென்னை சத்தியம் திரை அரங்கில் புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் தங்களுக்கு இருந்து ஒரு சில ஐயங்களை (சந்தேகங்கள்) விழா ஏற்பாட்டாளர்களிடம் எழுப்பினர். அதற்கு அங்கு இருந்த சமுக விரோத கும்பல் அந்த மாணவர்களை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியது. இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்கள் மீண்டும் தொடருமானால், அந்த சமூக விரோத கும்பல் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். 

No comments:

Post a Comment