August 18, 2014

பருத்தித்துறை புலொலியில் எரியுண்ட பெண்ணின் சடலம் மீட்பு!

வடமராட்சியில் வீடுகளில் தனித்திருக்கும் வயோதிபப் பெண்களைக் கொள்ளையின்
பின்னர் கொலை செய்து தீயிட்டரிக்கும் கும்பலை கண்டறிய முடியாது காவல்துறை திண்டாடி வருகின்றது. அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் எரியூட்டப்பட்டிருக்கலாமென நம்பப்படும் பெண் ஒருவரின் சடலம்  புலொலி முதலாம் கட்டைப் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.  இதில் அதே இடத்தைச் சேர்ந்த ஆசிரியையான தருமராசா லக்ஷ்மி (வயது 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மேற்படி ஆசிரியை வீட்டில் தனியாக வசித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  முதல் வீட்டை விட்டு அவர் வெளியில் வராததையடுத்து, சந்தேகம் கொண்ட அயலவர்கள் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தள்ளனர். இதனையடுத்து, ஆசிரியையின் வீட்டிற்குச்சென்று பார்த்த போது, ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார்.   

ஏற்கனவே பருத்தித்துறை மற்றும் தும்பளை பகுதிகளினில் இதே போன்று தீமூட்டப்பட்ட பெண்களது சடலங்கள் மீட்கப்பட்ட போதும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment