August 23, 2014

மன்­மோகன் சிங், அஜித் டோவல் ஆகியோருடன் தமிழ்க் கூட்­ட­மைப்­பினர் சந்­திப்பு!

இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங் மற்றும் பாது­காப்பு ஆலோ­சகர் அஜித்­குமார் டோவல் ஆகி­யோரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர்
நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்­தித்து பேச்சுவார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.
நேற்று பிற்­பகல் 3.30 மணி­ய­ளவில் இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கரை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தூதுக் குழு­வினர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.
இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­ போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்தும் இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை மீறிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்தும் கூட்­ட­மைப்­பினர் விளக்கிக் கூறி­யுள்­ளனர்.
இதேபோல் நேற்று மாலை 6 மணி­ய­ளவில் முன்னாள் பிர­தமர் மன்­மோ­கன் ­சிங்கை கூட்­ட­மைப்­பினர் சந்­தித்து இலங்கை நிலை­வரம் தொடர்­பிலும் தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் குறித்தும் எடுத்துக் கூறி­யுள்­ளனர்.
இதே­வேளை இன்று காலை 10.30 மணி­ய­ளவில் இந்­தியப் பிர­மதர் நரேந்­தர மோடியை கூட்­ட­மைப்­பினர் சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பில். வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பங்குபற்றவுள்ளார்.

No comments:

Post a Comment